கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணத்தில் உச்சத்தை எட்டிய திமுக கோஷ்டி மோதல் : கேள்விக்குறியாகும் அம்ருத் 2.0 திட்டத்தால் மக்கள் அதிருப்தி
May 26 2023 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் அம்ருத் 2.0 திட்டம் செயல்படுத்துவதில் திமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் அம்ருத் 2.0 திட்டத்தில், தென்பெண்ணையாற்று நீரை உறிஞ்சு, கிணறுகள் அமைத்து குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட நிலையில், குண்டலப்பட்டி பஞ்சாயத்து தலைவரும், திமுக பிரமுகருமான பாஸ்கரன் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். தகவலறிந்து சென்ற காவேரிபட்டணம் பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு செய்த பாஸ்கர், தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டுமானத்திற்கு அமைக்கப்பட்ட ஷெட்டுகளையும் பிரித்து வீசியுள்ளார். தொடர்ந்து தகராறு ஏற்பட்டதை அடுத்து இருதரப்பினருமே போராட்டத்தில் ஈடுபட்டனர்.