திருப்பத்தூர் அருகே காவல்துறை வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து : படுகாயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதி
May 26 2023 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையோரம் நின்ற காவல்துறை வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். சோலூர் பகுதியில் லோடு லாரி ஒன்று, பழுதாகி சாலையோரம் நின்றது. இதனை அவ்வழியே ரோந்து சென்ற போலீசார், வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி காவல்துறை வாகனத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த காவலர் சங்கர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.