செங்கல்பட்டு அருகே உள்ள அரசு மதுபான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை, காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனை
May 26 2023 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு அருகே உள்ள அரசு மதுபான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை, காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளான ஓதியூர், கடப்பாக்கம், விளம்பூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுகிறதா என் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.