திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக ஓட்டுநர் ஒருவர் வெட்டிப் படுகொலை - போலீசார் விசாரணை
May 26 2023 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக ஓட்டுநர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரகாஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யாவிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக நகைகளை வாங்கி அடமானம் வைத்து, நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லாரி ஓட்டுநரான பிரகாஷ் அங்குள்ள குவாரியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூர்யா, அவரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பிரகாஷ் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.