கரூர் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு : கொழுந்துவிட்டு எரிந்த தீயால் வாகன ஓட்டிகள் அவதி
May 26 2023 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்மநபர்கள், தீ வைத்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.