திருப்போரூர் அருகே காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் : பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
May 26 2023 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஓரகடம் ஊராட்சி கட்டைகழனி பகுதியை சேர்ந்த மீனா என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடைய, மீனாவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மீனா தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.