சென்னை அம்பத்தூரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
May 26 2023 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அம்பத்தூரில் மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் தஷ்வந்த், வீட்டின் வாசலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில், மின்கம்பத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் மின்இணைப்பு வயர் அறுந்து அருகில் இருந்த இரும்பு கம்பத்தில் உரசியதாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் இரும்பு கம்பத்தை கையில் பிடித்த சிறுவன் தஷ்வந்த் தேவா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.