பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக பேசிய அமைச்சர் நேரு : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கேட்ட கேள்வியால் ஆத்திரம்
May 26 2023 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து அமைச்சர் நேருவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அநாகரிகமாக பதில் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என். நேருவிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களிடம் அநாகரிமான முறையில் பேசியது முகம் சுளிக்க வைத்துள்ளது.