தமிழகத்தில் முதல்முறையாக அமுல் பால் நிறுவனம் தொடக்கம் : ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
May 26 2023 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமுல் பால் நிறுவனம் தனது பால் கொள்முதல் மையத்தை தொடங்கியுள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மிகப்பெரிய பால் நிறுவனமான அமுல் நிறுவனம், தட்டக்கல் பகுதியில் தனது பால் கொள்முதல் மையத்தை தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.