ஜூன் 1 முதல் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிதடை காலம் : கடலுக்கு சென்ற மீனவர்கள் 31ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவிப்பு
May 26 2023 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் குஜராத் வரை உள்ள அரபிக்கடல் பகுதிகளில் வரும் ஜூன் 1 முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால், மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். தமிழகத்தின் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் விசை படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அரபி கடல் பகுதிகளில் மீன் பிடி தடை காலம் ஜூன் 1ல் தொடங்கவுள்ளது. எனவே குளச்சல், தேங்காய்பட்டிணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் எங்கிருந்தாலும் வரும் 31-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.