கரூர் அருகே காணாமல் போன 16 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : திமுக கவுன்சிலரின் குடும்பம் தான் காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
May 26 2023 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காணாமல் போன 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், திமுக கவுன்சிலரின் குடும்பத்தினர் தான் இதற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த தேவிகா என்ற 16 வயது சிறுமியும், திமுக கவுன்சிலர் செல்லாண்டியின் மகன் கஜேந்திரன் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கஜேந்திரனின் குடும்பத்தார், தேவிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன தேவிகா, சவாரிமேட்டில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேவிகாவின் இறப்புக்கு திமுக கவுன்சிலர் செல்லாண்டி என்ற குணசேகரும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.