திருப்பூர் அருகே ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்கள் விற்பதாக புகார்
May 26 2023 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து நிறுவன பொருட்களும் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை தவிர்த்து, மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆவின் பொருட்களை வைப்பதற்கு பதிலாக, மற்ற குளிர்பானங்கள், பிஸ்கட், சிகரெட் மற்றும் பஜ்ஜி, வடை போன்ற பொருட்கள் மட்டும் கடையில் வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.