'1947 ல் ரூ. 15 ஆயிரத்திற்கு செங்கோலை செய்து கொடுத்தோம்' : உம்மிடி குழுமத்தைச் சேர்ந்த உம்மிடி பாலாஜி தகவல்
May 26 2023 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
1947ம் ஆண்டு 15 ஆயிரம் ரூபாய்க்கு செங்கோலை செய்து கொடுத்ததாக சென்னை தியாகராய நகரில் உள்ள உம்மிடி குழுமத்தைச் சேர்ந்த உம்மிடி பாலாஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் குடும்பம் செய்த செங்கோல், 75 வருடம் கழித்து நாடாளுமன்ற கட்டடத்தில் அலங்கரிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 1947-ல் 12 பேர் ஒன்றிணைந்து ஒரு மாதத்தில் இந்த செங்கோலை செய்ததாகவும், அது நாட்டின் முதல் பிரதமருக்கு கொடுக்கப்பட்டதாகவும், தனது தந்தை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த செங்கோலை செய்யச் சொன்ன திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.