ஐ.டி. அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியை பிரதிபலிக்கிறது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
May 26 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திமுக குண்டர்கள் அதிகாரிகளை தாக்கி, கார்களை அடித்து நொறுக்கியது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுகவினர் பெண் அதிகாரியை சிறைபிடித்து, அதிகாரியின் காரை சூறையாடி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின் திமுகவினரை பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், திமுக குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.