புதுக்கோட்டை அருகே டிரான்ஸ்பாரம் பழுது காரணமாக 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
May 26 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கொடிவயல் கிழக்கு பகுதியில் டிரான்ஸ்பாரம் பழுது காரணமாக கடந்த 3 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் கிராம மக்கள், இதனால் அன்றாட பணிகள் பாதிப்பட்டதுடன் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். டிரான்ஸ்பாரம் பழுதை உடனடியாக சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என கூறி பேராவூரணி செல்லும் சாலையில் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.