ஏற்காட்டில் 46-வது கோடை மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள் : அதிக வரவேற்பை பெற்ற டிராகன் பொம்மைகள்
May 26 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடை விழா நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஏற்காடு கோடை விழாவின் 6ம் நாளான இன்று மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். டிராகன் பொம்மைகள் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றன. வண்ணமயமான மலர்களுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.