ராமநாதபுரம் அருகே அரசு அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் - 3 பேர் கைது
May 26 2023 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரசு அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி சவடுமண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், சவடுமண் ஏற்றி வந்த ராஜா, சஞ்சய் காந்தி, வேலுச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.