மனுக்களை நிலுவையில் வைப்பது அதிகாரிகளின் கடமை தவறிய செயல் : ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
May 26 2023 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டை ஓடைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவை, ஆத்தூர் தாசில்தார் பரிசீலனை செய்து 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த பிப்ரவரி மாதமே அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரரின் மனுக்களை நீண்ட காலமாக பரிசீலனை செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது அதிகாரிகளின் கடமை தவறிய செயல் என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து ஆத்தூர் தாலுகா தாசில்தார் பரிசீலித்து, 3 மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.