ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் இருந்த மூங்கில் மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு
May 26 2023 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் இருந்த மூங்கில் மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சாலை நடுவே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமரம்பேடு பகுதியில் சாலையோரம் அடர்ந்த மூங்கில் தோப்பு அமைந்துள்ளது. இந்த மூங்கில் தோப்பில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் மூங்கில் மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்ததுடன், காற்றின் வேகம் காரணமாக சாலையின் நடுவே விழுந்தன. அப்போது குன்றத்தூர் நோக்கி சென்ற லாரி ஒன்று திடீரென நின்றதால், பின்னால் வந்த சொகுசு கார், லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினர்.