அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம் : வரும் 1-ம் தேதி தொடங்கும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு
May 29 2023 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.