திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் திறப்பு : மன்னார்புரம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
May 29 2023 1:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மன்னார்புரம் மேம்பாலம் பணிகள் நிறைவுற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி, 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பை இணைக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மன்னார்புரம் மேம்பால பணி முழுமை அடையாமல் இருந்தது. மக்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு பணிகள் நிறைவுற்று மன்னார்புரம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.