ராமநாதபுரத்தில், தகாத உறவில் ஈடுபட்ட அக்காவை அடித்து கொன்ற தம்பி : தம்பியை கைது செய்து போலீஸ் விசாரணை
May 29 2023 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரில் தகாத உறவில் ஈடுபட்ட அக்காவை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். காவனூர் ஆசாரி மடத்தை சேர்ந்த பவித்ரா என்பவர், கணவரிடம் விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது முருகானந்தம் என்பவரோடு ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கண்டித்த தந்தையை பெட்ரோல் ஊற்றி அவர் கொலை செய்தார். இந்த வழக்கில் சிறையில் இருந்துவிட்டு வந்த பவித்ரா, கண்ணன் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சித்தப்பா மகன் மணிகண்டன் கண்டித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், இரும்பு கம்பியால் தாக்கியதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.