46வது கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு - ஒரு லட்சம் பேர் கண்டுகளிப்பு : காய்கறிகளைக் கொண்டு சிறப்பு உருவங்களை அமைத்தவர்களுக்கு பரிசு
May 29 2023 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மலர்கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. கோடை விழாவை ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி கூறினார். கோடை விழா பொறுப்பு அதிகாரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கினார். 8 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வீட்டு தோட்டம் அமைத்தல், மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காய்கறி கொண்டு சிறப்பு உருவங்களை அமைத்தவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பரிசுகள் வழங்கினார்.