மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 பெறும் பிச்சைக்காரன் யார்? : மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை அருகே வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு
May 29 2023 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் கூடுதலாக பத்து ரூபாய் பெறும் பிச்சைக்காரன் யார் என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், சித்தர் காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் பெறும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் என்ற வாசத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.