கோவை அருகே 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சூறையாடிய காட்டு யானைகள் : அகழி அமைத்து பயிர்களையும், பொதுமக்களையும் காத்திட கோரிக்கை
May 29 2023 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த நரி முடக்கு பகுதியில் மாந்தோப்பில் புகுந்த காட்டு யானை கூட்டம் 20க்கும் மேற்பட்ட மா மரங்களை சூறையாடியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டுயானைகள், சக்திவேல் என்பவரது மாந்தோப்பில் புகுந்தன. அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மாமரங்களை உடைத்து காட்டு யானைகள் நாசமாக்கின. இரவில் யானைகள் உலா வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். விவசாய நிலங்களை சுற்றி வனத்துறையினர் அகழி அமைத்து பயிர்களையும், தங்களையும் காத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.