நெல்லை அருகே படுக்கை அறையில் இளம்பெண் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு : விபத்து மரணமா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை

May 29 2023 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீட்டு படுக்கை அறையில் இளம்பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டி பொன் நகர் பகுதியை சேர்ந்த சேகரின் மகள் சுபா சி.ஏ. படித்துள்ளார். நேற்றிரவு படுக்கை அறைக்கு வழக்கம்போல் தூங்க சென்றுள்ளார். இன்று காலை சுபாவின் பெற்றோர் சர்ச்சுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்தபோது படுக்கையறையில் சுபா உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், வீட்டிலிருந்து பிரிட்ஜ் ஸ்டெபிலைசர், ஸ்விட்ச் போர்டு, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியிருந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வி.கே.புரம் போலீசார் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விபத்து மரணமா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00