திருப்பத்தூர் அருகே மணல் கடத்தல் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் படுகாயம்

May 29 2023 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர். மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த நீலமேகன் என்பவரின் வீட்டின் அருகே தேவராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி உள்ளனர். இதனையடுத்து, நீலமேகன் மனைவி செந்தாமரை, மகன் இசையரசு ஆகியோர் பள்ளத்தை சமன் செய்யுமாறு தேவராஜிடம் பலமுறை கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டில் இருந்த செந்தாமரையிடம் தேவராஜும், அவரது மகன் ராஜ்குமாரும் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் செந்தாமரையையும், இசையரசையும் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். காயம் அடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00