புதுக்கோட்டை அருகே ஸ்ரீபாலடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி : சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் டேபிள், ஃபேன், மிக்ஸி, கேஸ் அடுப்பு, சைக்கிள் உள்ளிட்ட பரிசு
May 31 2023 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டுப் போட்டி நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஸ்ரீபாலடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். மேலும், போட்டியில் சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகளும், டேபிள், ஃபேன், மிக்ஸி, கேஸ் அடுப்பு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.