தமிழகத்தை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் ஏர்வாடியில் பிடிபட்டனர் : 100-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது
May 31 2023 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 100-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ஏர்வாடி தனியார் விடுதியில் தங்கியிருந்த குடவாசலை சேர்ந்த முருகானந்தம், திருமுல்லைவாயலை சேர்ந்த ஹரி பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்து, கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும், பிரபல அரசியல் தலைவர் வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீசார்கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.