ராணிப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து : ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு - 3 குழந்தைகள் படுகாயம்
May 31 2023 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாலாஜா அருகே அம்மனந்தாங்கல் என்ற பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று சாலையோரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கண்டெய்னர் மீது மோதியதில் காரில் பயணித்த திருமால், எழிலரசி மற்றும் ஓட்டுனர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயண்ணம் செய்த 3 குழந்தைகள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.