திருச்சியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : ஊடங்களில் செய்தி வெளியான நிலையில், மாநகர காவல் ஆணையர் சத்யப்ரியா நடவடிக்கை
Jun 6 2023 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சியில் புகார் கொடுக்கச் சென்ற தனியார் கல்லூரி கவுரவ பெண் விரிவுரையாளரிடம் காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ஆய்வாளர் சுகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.