வேலூர் அரசு மருத்துவமனையில் ஓட்டுநரின் தலையின் உள்ளே இரும்பு நட்டு வைத்து தையல் போடப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

Jun 6 2023 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஓட்டுநரின் தலையின் உள்ளே இரும்பு நட்டு வைத்து தையல் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன், நேற்று விபத்தில் சிக்கிக் கொண்டார். தலையில் படுகாயமடைந்த அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்ட நிலையில், தலையில் கடுமையான வலி இருந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அவரை வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தனர். அதில் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கார்த்திகேயனின் தலையில் இருந்த இரும்பு நட்டு அகற்றப்பட்டது. அரசு மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00