ஹஜ் புனித யாத்திரைக்கு முதல் குழு ஜெட்டா பயணம் : 2 சிறப்பு விமானங்கள் வரும் 21 ஆம் தேதி வரை இயக்கம்
Jun 7 2023 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழு சென்னையிலிருந்து இன்று தனி சிறப்பு விமானங்களில் ஜெட்டா புறப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிக்கை வரும் 29-ஆம் தேதி கொண்டாப்படவுள்ளது. இதையொட்டி, ஹஜ் புனித பயணமாக, சவுதி அரேபியாவில் உள்ள மதினா மெக்காவிற்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் செல்வது வழக்கம். இதனிடையே, ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதன் அடிப்படையில், அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், விமானத்தில் பயணிக்க 2 தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு விமானங்கள் வரும் 21-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 254 யாத்திரிகளுடன் முதல் விமானம் ஜெட்டா புறப்பட்டது.