திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார் பட்டி ஊராட்சியில் மதுபானம் விற்பனைக்கு ஊராட்சி நிர்வாகம் தடை
Jun 7 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார் பட்டி ஊராட்சியில் இளைஞர் நலன் கருதி மதுபானம் விற்பனைக்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள எமக்கலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய வேலாம்பட்டி, அண்ணா நகர், கைலாசம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அனைத்து ஊர்களிலும் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்து வந்த நிலையில், இதை தடுக்க பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து, எமக்கலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.