தூத்துக்குடி அருகே பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ள தனிநபர் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Jun 7 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே முடிவைத்தானந்தல் கிராமத்தில் பிரதான சாலையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டு காலமாக பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சாலையின் ஒரு பகுதியை தனிநபர் ஆக்கிரமித்து, பள்ளம் தோண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள், சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.