திருவண்ணாமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை - மக்கள் வேதனை
Jun 7 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலசப்பாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை முன் பக்கம் முழுவதும் பேனரால் மறைக்கப்பட்டும், உள் பக்கம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் பயணிகள் அமரும் இருக்கைகள், வயது முதிர்ந்த ஆதரவற்றோர்களின் இருப்பிடமாக மாறியுள்ளன. இவர்கள் பல மாதங்களாக இங்கே தங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.