தென்காசி அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங் பெண் குழந்தையை வீசி சென்ற மர்மநபர்கள்
Jun 7 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை பேருந்து நிலைய நிழற்குடையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள பேருந்து நிழற்குடையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்த மூதாட்டி ஒருவர், குழந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையை வீசி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.