மதுரை அருகே பிண்ணாக்கு தண்ணீர் அருந்திய 3 பசு மாடுகள் உயிரிழந்த சோகம் - போலீசார் தீவிர விசாரணை
Jun 7 2023 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிண்ணாக்கு தண்ணீர் அருந்திய 3 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாயி என்பவர் 7 பசு மாடுகளை வளர்த்து அதற்கு தேவையான தீவனங்களை பயிரிட்டு வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடுகளில், 3 பசுமாடுகளுக்கு பிண்ணாக்கு கலந்து தண்ணீர் வைத்துள்ளார். தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே பசுமாடுகள் மயங்கி விழுந்து நுரை தள்ளியவாறு உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாயி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், பிண்ணாக்கு நீரில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.