அரிசிக் கொம்பன் யானையால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Jun 7 2023 6:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் காட்டு யானையால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலை உள்ளிட்ட 18 மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக் கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முத்துகுழி வயல் பகுதியில் விட்டனர். இந்நிலையில், கோதையாறு அணையில் யானை தண்ணீர் குடிக்க வந்த காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் மலை கிராமங்களுக்கு உணவு தேடி அரிசிக் கொம்பன் யானை வர வாய்ப்புள்ளதால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை இடம் மாற்ற செய்ய வேண்டும் எனவும் கூறி, தச்சமலை உள்ளிட்ட 18 மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.