தேனி அருகே தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த நபரை போலீசார் கைது
Jun 7 2023 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் கம்பம் அருகே தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ராயப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இரவு நேரங்களில் மேகமலை வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வன விலங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து இந்திரஜித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.