கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை - இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெண் அவதி
Jun 7 2023 7:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்தபின், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிக்கும் பெண், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அரச்சலூரை சேர்ந்த ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு வந்த ரம்யாவுக்கு வலி அதிகமாக இருந்ததால், அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அறுவை சிகிச்சை காரணமாக ரம்யாவின் ஆசனவாய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற ரம்யாவுக்கு, டியூப் மூலமாக இயற்கை உபாதை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.