திருச்சி விமான நிலையத்தில், உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல் : ரூ.1.14 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Sep 17 2023 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.