சென்னையில் இந்த மாதம் 15 பேர் டெங்குவால் பாதிப்பு : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
Sep 17 2023 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சியில் இந்தாண்டு 297 பேரும் இந்த மாதம் 15 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், 3 ஆயிரத்து 390 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பலன் அடைந்திருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 3 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனே மருத்துவ முகாமை அனுக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.