ராமநாதபுரம் அருகே கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் யூனியன் அலுவலகம் முற்றுகை : ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்
Sep 21 2023 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடலாடி தாலுகா மாரந்தை கிராமத்தில் காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதமாக வரவில்லை என மாரந்தை கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் குடிநீர் வராததால் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.