சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தொடர் சிகிச்சை : உடல் நலம் தேறி வருவதாகவும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தேமுதிக கோரிக்கை
Nov 20 2023 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் கடந்த சனிக்கிழமையன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு இருப்பதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.