சென்னையில் இரவு முதல் விட்டு, விட்டு மிதமான மழை : பகலிலும் மழை தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதி
Nov 21 2023 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையின் நகர்ப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர், மந்தவெளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.