திருவண்ணாமலை அருகே முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் வீடு புகுந்து திருட முயற்சி : 2 பேரை கட்டையால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பியோட்டம்
Nov 21 2023 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, வீட்டின் உரிமையாளரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.மருதாடு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். அதிகாலை அவரது வீட்டில் முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் திருட முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ரமேஷின் மகன் வேல்முருகன் கூச்சலிட்டார். இதனால், கொள்ளையர்கள் வேல்முருகனை கட்டையால் தாக்கி விட்டு தப்பியோடினர். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்கள் பிடிக்க முயன்றபோது, அங்குள்ள ஒருவரை கொள்ளையர்கள் தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.