திருப்பூர் அருகே மனு அளிக்க வந்த பெண்களை திருப்பி அனுப்பி திமுகவினர் அராஜகம் : வீடியோ எடுத்த செய்தியாளர்களுக்கும் திமுகவினர் மிரட்டல்
Nov 21 2023 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த மக்களை திமுக-வினர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் நகராட்சியின் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் நகராட்சி தலைவரிடம் மனு அளிக்க வந்தபோது, அங்கிருந்த திமுகவினர், தலைவர் இல்லை எனக் கூறி அவர்களை அச்சுறுத்தி அனுப்பியதுடன், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்திக்கும் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களையும் திமுகவினர் மிரட்டியுள்ளனர்.