தென்காசி அருகே ஒருதலை காதலால் பெண்ணின் தந்தையை கொன்ற இளைஞர் கைது : மகளுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகத்தில் மூழ்கிய திருமண வீடு
Nov 21 2023 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒருதலைக் காதலால் பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புளியங்குடி பகுதியை சேர்ந்த ஐயாக்குடி என்பவர், தனது மகளுக்கு 23ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டினுள் புகுந்த மர்மநபர், ஐயாக்குட்டியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் செல்வமுருகன் ஐயாக்குட்டியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததும், அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ததை அறிந்து ஐயாக்குட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.