சென்னை மாதவரம் அருகே பணி முடித்து சென்ற நபரை துரத்தி துரத்தி வெட்டிய மர்மகும்பல் : கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
Nov 21 2023 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாதவரம் அருகே பணிமுடித்து வீடு திரும்பிய தனியார் நிறுவன ஊழியரை மர்மநபர்கள் துரத்தி துரத்தி வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. எருக்கஞ்சேரி நேரு நகர் பகுதியை சேர்ந்த செழியன் என்பவர், வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், பணிமுடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மாதவரம் அருகே செழியனை வழிமறித்த மர்மநபர்கள் அவரை துரத்தி சென்று கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.